அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்புக்காக இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளை அதிபர் ஜோ பைடன் வழங்கி கௌரவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியுமான அசோக் காட்கில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொழில்நுட்பம், எரிவாயு சிக்கன அடுப்பு, எலெக்ட்ரிக் விளக்குகள் தொடர்பான ஆராய்ச்சியில் குறைந்த விலையில் பலன்தரும் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக அமெரிக்காவின் உயரிய விருதான வெள்ளை மாளிகை தேசிய விருது அசோக் காட்கிலுக்கு வழங்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில் விருது பெற்ற 12 விஞ்ஞானிகளில் அசோக் காட்கிலும் ஒருவர். அசோக் காட்கில் கான்பூரில் உள்ள ஐஐடியில் இயற்பியல் பயின்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
இதையும் படியுங்கள் : I.K.குஜ்ரால், தேவகவுடா பிரதமர் ஆனபோது, இபிஎஸ் ஏன் பிரதமர் ஆகக் கூடாது? – ராஜேந்திர பாலாஜி கேள்வி
அதேபோல் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானியான சுப்ரா சுரேஷுக்கு வாழ்க்கை அறிவியல், உடற்கூறு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அவரது ஆராய்ச்சிக்காக வெள்ளை மாளிகை தேசிய விருது வழங்கப்பட்டது. ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சுப்ரா சுரேஷுடன், அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் ஆவார்.