2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், ஜவான் படம் ஒரு படி மேல் சென்று ரூ.1100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஷாருக்கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஷாருக்கானுக்கு எப்போதும் ஆறு துப்பாக்கி ஏந்திய போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஷாருக்கானின் இல்லத்திலும் நான்கு ஆயுதம் ஏந்திய போலீசார் எப்போதும் பாதுகாப்பில் இருப்பர். ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் கணிசமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதாக வி.ஐ.பி பாதுகாப்புக்கான சிறப்பு ஐ.ஜி.திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : முதல் சூரியசக்தி நகரமாகும் அயோத்தி… முழுவீச்சில் ராமர் கோயில் பணிகள்…
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஆன்லைன் கேமிங் செயலியை அங்கீகரித்த பிரபலங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் ஷாருக்கானுக்கு எதிராகவும் அவரது வீடு அமைந்துள்ள மன்னத் பகுதியை சுற்றி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் மார்ச் மாதம், இரண்டு பேர் மன்னாட்டில் அமைந்துள்ள அவரது வீட்டு வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாகவும், அப்போது, அந்த நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக மும்பை போலீஸார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.