29.4 C
Chennai
June 9, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!

இந்நிலையில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீது இன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.சந்திரசேகர், நீதிபதி நவநீத் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading