29.4 C
Chennai
June 9, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும்… அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2024 முதல் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா – யார் இவர்?

இந்நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு ஊழியர்களுக்கும் 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2024 முதல் தேதியிட்டு வழங்க வேண்டும் எனவும் அனைத்து அரசு துறை தலைவர்களுக்கும் நிதித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading